சனி, 28 நவம்பர், 2009

எனது எழுத்துக்கள் "அ" விலிருந்து "ஃ" வரை

இத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த மன்னார் அமுதனுக்கு நன்றிகள்...
இதை தொடர நாட்கள் அதிகம் எடுத்து விட்டது...
இருப்பினும் இன்று முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது 


சரி...இனி வாருங்கள் பார்க்கலாம் 







அன்புக்குரியவர்கள்: எனக்கு கிடைத்த உயரதிகாரிகள் மற்றும் நண்பர்களும்  அடுத்தவர்களுக்கு  உதவுவோரும்

ஆசைக்குரியவர்: ஒரே ஒருவர் தான் .

இலவசமாய் கிடைப்பது: அட்வைஸ் தான்

ஈதலில் சிறந்தது: வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக் கூடாதாம்

உலகத்தில் பயப்படுவது: நய வஞ்சக நண்பர்களுக்கு

ஊமை கண்ட கனவு: புரியவில்லை  


எப்போதும்உடனிருப்பது: அலைபேசி

ஏன் இந்த பதிவு: நீண்ட நெடும் காலமாக  பதிவிடாமல் இருந்த என்னை  மன்னார் அமுதன் அழைத்ததால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி எண்டுதான் நான் நினைக்குறன்

ஒரு ரகசியம்: அது இரகசியம்

ஓசையில் பிடித்தது: ஆசைக்குரியவரின் குரல்

ஔவை மொழி ஒன்று: "ஊக்கமது கைவிடேல் "

(அ)ஃறிணையில் பிடித்தது(வை) : நாய் பன்றி கழுதை தவிர அனைத்தும்

A – Avatar(Blogger) Name/Original Name : தெருவிளக்கு /சனூன்

B- Best Friend?: few(Friends,Who are understand me)

C- Cake or Pie ?: Pie

D – Drink of choice? : Orange Juice

E – Essential item you use every day? : Mobile Phone, Laptop, Desktop, Motorbike. Pen

F – Favorite color? : Green

G – Gummy Bears Or Worms?: No Idea

H – Hometown? : Sainthamaruthu

I – Indulgence? : Work

J – January or February? April

K – Kids & their names? : I apply for a Membership in P.P.S

L – Life is incomplete without? : Love

M – Marriage date? : Ignore

N – Number of siblings? : Four

O – Oranges or Apples? : Apples

P – Phobias/Fears? : Nothing

Q – Quote for today?: "வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்"

R – Reason to smile? : "Thinking About Sri Lankan Politics"

S – Season? : Summer

T – Tag 4 People? : உதய தாரகை

                              அலப்பறை 
                             .......................
                             .......................
U – Unknown fact about me? : I don't Know

V – Vegetable's you don't like? : Okra

W – Worst habit? : Postpone a Things

X – X-rays you've had? : No

Y – Your favorite food? : Chicken Buriyani

Z – Zodiac sign? : I don't know



மறக்காம வாக்கு போடுங்க என்ன ...

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இலங்கையில் பதிவர் சந்திப்பு

இது இலங்கையில் நடை பெற ஏற்பாடாகியுள்ள பதிவர் சந்திப்பு
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் பதிவர் சந்திப்புகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எம் பிரதேசத்திலும் எப்போது எப்படி இதை ஆரம்பிப்பது என்று எண்ணியிருக்கிறேன்.
ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட செய்தி

இதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன - சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.



காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌...

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


இது தொடர்பான தகவல்கள் எட்டாதவர்கள் தயக்கமின்றி தொடர்பு கொள்ளுமாறும் தங்களின் வருகையினை உறுதிப்படுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபனைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

அனைவரும் தனிப்பட்ட அழைப்பாக கருதி பங்கெடுப்பீர்களென நம்புகின்றோம்.


எனது உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.....

புதன், 20 மே, 2009

உணர்வுகளும் அதனை ஆளுதலும்....



மனிதம் உணர்வுகளால் பின்னப்பட்டதுதான்
இவ் உணர்வுகளை கட்டு படுத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் சவாலான விடயம் ஒன்றாகவே உள்ளது....
சில நேரங்களில் மேலெழும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போகும் அதே வேளை மேலும் சில நேரங்களில் சில உணர்வுகளை எம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறோம் ...
எந்தெந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியுமாயிருக்கும் என்பதும் முடியாமலிருக்கும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலைகளையும் பொறுத்த விடயம்தான்....

எவை எப்படி இருப்பினும் உணர்வு கட்டுப்பாடு என்பது மன உறுதிப்பாட்டில் தான் தங்கியிருக்கிறது...

இது தொடர்பில் உங்கள் கருத்தையும் சொல்லுங்களன்...

வியாழன், 23 ஏப்ரல், 2009

என் இனிய உள்ளங்களே... நன்றி.....நன்றி...

எனது பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்...... குறுகிய இந்த வாழ்க்கை காலத்தில் நான் பதித்த கால் தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்... பிறந்த போது என்னுடன் இருந்த எனது சொந்தகளுக்கு மேலாக நீங்களும் இப்போது என்னுடன் இருக்கிறீர்கள்... எனது பாடசாலை காலம் முதல் இன்று வரை பல்வேறு மனித முகங்களை உள்ளங்களை சந்தித்திருக்கிறேன்.... இந்த காலத்தில் என்னால் தெரிந்தே யாருக்கும் கெடுதி நினைத்ததில்லை.... ஆனாலும் யாரும் அப்படி நினைத்திருப்பின் மன்னித்து விடுங்கள்... இதுவரை எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், தெரிவிக்க இருக்கிறவர்களுக்கும், தெரிவிக்க மறந்தவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்... நான், நன்றி தெரிவிப்பதையோ மன்னிப்பு வேண்டுவதயோ விரும்புவதில்லை... அதற்காக நீங்களும் அப்படி இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளவுமில்லை ... உங்கள் உணர்வுகளை மதிப்பதனால் தான் மேற்படி நன்றிகளும் மன்னிப்பு கோரலும்... குறுகிய வட்டத்துக்குள் இருந்த எனக்கு இன்று உலகம் முழுதும் பல்லாயிரம் நண்பர்கள்... உங்களை எனக்களித்த இறைவனுக்கு என் முதல் நன்றிகள் .... இரண்டாவதாக எனது பாடசாலைக்கு... அடுத்து இன்று வளர்ந்து உயர்ந்து நிற்கும் இணையத்துக்கு/ அல்லது அதனை தந்தவருக்கு எனது பிரதேச மக்களோடும் நாட்டு இளையவர்களோடும் தொடர்பாக்கிய, எனது திறன் விருத்திக்கு ஊக்கமளித்த 1. பிரதேச செயலகம் - சாய்ந்தமருது (இது எனக்கு நல்ல நண்பர்கள் பலரையும்,உறவுகளையும், நான் என்றும் நேசிக்கும் மேலதிகாரியையும் தந்தது-விஷேடமாக) 2. இலங்கை இளையோர் பாராளுமன்றம் ( இதுதான் எனது வாழ்க்கை பாதை மாற்றத்துக்கு காரணம் என்றால் மிகையல்ல) 3. தேசிய இளையோர் சேவைகள் மன்றம்(செயற்திறன் அற்றிருந்தாலும் பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்) * மூஞ்சிப்புத்தக(Face Book) நண்பர்களுக்கும் எனது விசேட நன்றிகள்..... தெரு விளக்குக்கு வந்து போகும் நீங்கள் எனது இடுகைகளுக்கு பின்னூட்டம் இடுமாறு வேண்டுகிறேன்.... இதுவே எனக்கு தூண்டுகோலாக இருக்கும்.... -------மீண்டுமொருமுறை என்னை வாழ்த்துக்களால் போர்த்தும் நண்பர்களுக்கு நன்றிகள்- ----------என்னை முதலில் வாழ்த்திய தோழியே உமக்கும் நன்றி ------------
உங்களால் ஏற்பட்ட இந்த மன மகிழ்ச்சியை சொல்லில் வடிக்க முடியவில்லை

வெள்ளி, 6 மார்ச், 2009

தலைவாசல்

எடுத்த எடுப்பில் என்று இல்லாமல் கடந்த சில வருடங்களாக வலைப்பூக்கள் பற்றியும் அதனை பாவிப்பவர்கள் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன்.
இப்போதுதான் நாமும் கொஞ்சம் கிறுக்கினால் என்ன?
என்று தோன்றியது.
இதனால் ஏனைய வலைப்பூக்களின் பாதிப்பு சிறிதேனும் இருக்கத்தான் செய்யும்....
இணைய வெளி எங்கும் பரந்து கிடக்கும் வலைப்பூக்களுக்கு மத்தியில் எனது வலைப்பூவும் பறக்க எத்தனிக்கும் குருவியின் கீச்சுக் குரலாய் ஒலிக்கிறது.......
இது சிறகடித்து பறப்பதும், சிறகொடிந்து கிடப்பதும் உங்களின் ஆதரவில்தான்.
நான் தமிழ் பாண்டித்தியம் பெற்றவனன்று.எனது கிறுக்கல்களில் சறுக்கல்கள் இருந்தால், தமிழ் தாயே....தமிழ் வளர்ப்பவர்களே... மன்னிக்க வேண்டுகிறேன்...
சில இடுகைகளை ஆங்கிலத்திலும் இட எதிர் பார்க்கிறேன்........
எனது வலைப்பூவை மெருகூட்ட உங்களால் தரப்படும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் வலைப்பூ பற்றி எனக்கு தெரிந்தது சிறிதுதான்.
இறுதியாக ஒரு வேண்டுகோள்......
இந்த தெரு விளக்கு சரியாக ஒளிரவில்லையாயின் தெரிய படுத்துங்கள் சரி செய்ய கடமைப் பட்டுள்ளேன்

எனது வலைப்பூவுக்கு வந்து போகும் அனைவருக்கும் நன்றி